Friday, August 5, 2011

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல புத்தகத்தின் ஒரு பாகம் படித்த நிறைவு. என் நண்பன் ஸ்ரீநிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு.

சுஜாதாவின் நடைகளில் ஒரு 'FICTION' இல்லாத படைப்பு. ரங்கா கடை தொடங்கி, கே வி குறும்புகள் வரை, எத்தனை மனிதர்கள்!!! கைகிளை இலக்கணம் வகுத்த கோபால்தாஸ், வீரசிம்மன் நாடகம், சைக்கிள் பழகியது, பத்தணா அய்யங்கார், பாம்பு அடித்தது, கிரிக்கெட் விளையாட்டு .....இன்னும் பேசலாம். நடைகளில் சுஜாதா நிழலாடுகிறார். எவ்வளவு கவிதை தனமாய் இருந்திருகிறது வாழ்கை. இதோ பணத்தின் பின்னால் ஓடி கொண்டிருக்கிறோம். அடுத்த தலை முறைக்கு என்ன கொண்டு செல்லபோகிறோம்.

ஒரு நல்ல எழுத்தாளர் மட்டும் அல்ல ஒரு நல்ல வாழ்கையும் இழந்து விட்டோம்.

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...