Tuesday, June 11, 2013

இன்னுமா இனிக்கிறது இந்தியா

முகலாயர் முதல் முதலாளிகள் வரை 
முகர்ந்து பார்த்தும் நகர வில்லை 
சனங்கள் கூடும் இடமெல்லாம் சாராய கடைகள்
ஊற்றெடுக்கும் பெருமைகலாய்  ஊழல் கதைகள் 
அரசர்களை ஒழித்துவிட்டு அரசாங்கங்களை ஒளித்துவைத்தோம் 
இளங்கோ சொன்ன கூற்றெல்லாம் இளவல்கள் அறிவதில்லை 
(இருவர்) கூடி பேசும் விஷயமெல்லாம் கூத்தாடிகள் பற்றி தான் 
அரியணை ஏற கூட அரிதாரம் பூசுபவன் வேண்டும் 
IPL  தொடரை கூட ஆடுபவன் நிர்ணயிப்பது இல்லை 
ஆனந்த விகடன் கூட எட்டாக்கனி தான் ஏழைகளுக்கு 
மனிதம் புதைத்த இடத்தில் REAL ESTATE கொண்டாட்டங்கள் 
இன்னும் இனிக்கிறது இந்தியா 
கடல் கடந்தும் கரை கடந்தும் இங்கே களவு பயில வருவரோ 
இன்னுமா இனிக்கிறது இந்தியா 

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...