Friday, May 8, 2009

வேலைநிறுத்தம்

வேகாத வெயிலு சாமி வேத்து வடியிர தேகம் சாமி வாய் நிரம்ப பேசினாலும் வயிறு நிரம்பா வாழ்கை சாமி பசிகாம சோறு தின்னு பக்கத்துக்கும் படுத்து உருண்டு வேண்டாத கதை பேசி வேடிகக பாக்குற வாழ்கை இல்ல.........பள்ளிகூட வாசல்ல பழம் காய் வித்தா தான் பசியாருற வயிறு சாமி அஞ்சாறு புள்ள பெத்தும்அன்னாடம் காச்சி சாமி அடுத்த வீட்டு அஞ்சனைக்கு பேறுகாலம் நெருங்கிருச்சு அஞ்சாறு காசு சேத்துஅவசரத்துக்கு வெச்சிருக்கா அவ ஆத்தா எதுத்த வீட்டு பிள்ளைக ராவெல்லாம் படிக்குதுக ஏதேதோ பேசுதுக பரிட்சேன்னு புரியுது அஞ்சனையின் முனகலும் அணையாத விளக்கும் ராவெல்லாம் தூக்கமில்ல ராகம் பாடும் கொசுக்கும் கூட!விடிஞ்சதும் எந்திரிச்சாகடை அடபுன்னு காதோரம் சொல்லுதுக இலங்கையில ஏதோ போருன்னு சொன்னாக பட்டினி போர் எனகொன்னும் புதுசில்ல சாமி !கத கதன்னு வெயிலு உச்சி தொட்டு பாக்கும் போது என் கடக்குட்டி கேப்பாலே"அப்பா பசிக்குது " என்ன சொல்லி புரிய வெப்பேன் விடிஞ்சும் விடியாத என் வாழ்கைவேலைநிறுத்தம், இலங்கை தமிழர் எல்லாத்தையும்?

Friday, April 10, 2009

கேட்டதில் பிடித்தது

கண் இல்லாதவன்
கை நீட்டும் போது
நாமெல்லாம் குருடர்களாகிறோம்

உன்னை என்
மன சிறையில் தானே
வைத்தேன்
உன் தந்தையிடம் சொல்லி
என்னை ஏன்
மத்திய சிறையில் வைத்தாய்

Monday, March 16, 2009

வாழ்விழந்த வாழ்க்கை

காடுகள் எல்லாம்
கடலில் சேர்த்து
மனிதன் காலடி
காட்டிய கிராமத்துக்காரன் பேசுகிறேன்
அந்நியன் அட்சியில்
கூடஅரிசிக்கு வந்ததில்லை
அவல நிலை
காய்கறி விற்பதற்கு
கற்று கொடுக்கிறான் ஒருவன்
காய்ந்து போன
காட்டிற்கு வழி கேட்கிறோம் நாங்கள்
வாய்கால் பார்த்த நாங்கள்வடிகால்
தேடுகிறோம்எங்கள் இனமெல்லாம்
ஏற்றுமதி ஆனது நகரத்திற்கு
நகரத்தின் நாகரிகம் நடப்பட்டது
எங்கள் தோட்டங்களில்
கிராமத்தின் அழகே
கிறங்கிகிடக்கும் இயற்கை தான்இழுத்து
சென்று விடாதிர்கள்வரமாட்டால்
அவள் தமிழ் பெண்

கற்று கொடுங்கள்

கவிதை எழுத வேண்டும் நான்

கற்று கொடுங்கள்

காற்று வாங்க சென்றவன்

கவிதை வாங்கி விட்டான்

கவிதை வேண்டி வந்தவன்

கலக்கத்தில் இருக்கிறேன்

இரண்டு முறை சொன்னால்

கவிதை ஆகுமாம்

இரண்டு முறை எதை சொல்வது

தெரிந்தால் சொல்லுங்கள்

இயர்கைஐ ரசித்தால்இயலும் என்கிறார்கள்

இலைகளின் நடுவில்

இழைந்து ஓடும் நரம்புகளில்

காற்று வாசிக்கும்கவிதை ! காணாமல் போனேன் நான்சமூகம்

உனக்கு சொல்லி தரும் என்றர்கள்

சமூகம் சற்றே தள்ளி இருக்க சொன்னது

காதலித்து பார் கவிதை வரும் என்றார்கள்காதலிக்க

கற்று கொள்வது கவிதையை விட கடினமானது

இயற்கையின் எழுத்துகளிலும்

வாழ்கையின் வசந்தங்களிலும்

வாழ்விலா மாந்தரின் வறுமையிலும்

நிலவின் ஒளியில் நிழலாய் நிற்கும்

எனக்குகற்று கொடுங்கள் கவிதை எழுத

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...