Friday, August 30, 2013

கற்றதும் நின்றதும்

Fourier and Laplace series - உசிர குடுத்து படிச்சது இன்னும் கண்ணு முன்னாடி நிக்கிது. ஒரு தடவ கூடு பயன் படுத்தியது கிடையாது. பொறியியல் படிக்கும் காலத்தில் கற்று கொடுக்க பட்ட பவர் சிஸ்டம் தொடர்பான எந்த குறியீடுகளும் இப்போது ஞாபகம் இல்லை. காரணம் அதை பயன்படுத்திய பொழுதுகள் வாழ்கையில் இல்லை. என் பணிக்கு தேவையான படிப்பு எனக்கு வழங்க படவில்லை அல்லது பரவலாக கிடைக்கபெறும் வேலைகளின் நுணுக்கங்கள் பரவலாக கிடைப்பது இல்லை. எப்படி கொண்டாலும் கல்வியின் தரம் உயர்த்தப்படும் அளவிற்கு தேவையான கல்வி வழங்க படுவதில்லை. இந்திய வழிமுறைகளை கற்பிப்பதை விட இங்கே மேற்கத்திய நடைமுறைகளே உன்னதம் என்று உரைக்கபடுகிறது.

Differentiation and Integration (double and Triple) சொல்லிக்குடுத்த ஆசிரியர் அன்று எவ்வளவு உயரத்தில் என் மனதில் இடம் பிடித்தாரோ இப்போது அவர் படு பாதாளத்தில் இப்போது இருக்கிறார்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறிபிடுவது போல மரம் நட வேண்டும் என்று சொல்லி குடுக்கும் அதே ஆசிரியர் தான் பூச்சிகொல்லி மற்றும் கலைகொல்லி பற்றிய ரசாயன தாக்கத்தை கற்பிக்கிறார்.

இந்திய பொருளாதார வீழ்ச்சி பற்றி பேசும் நம்மில் பலர் இந்தியாவின் அடிப்படை வாழ்க்கை முறைகளை செய்திதாள்கள் பார்த்தே தெரிந்து கொள்கிறார்கள்

வாழ்க்கையோடு இயைந்த கல்வியை தேடி திரிகிறோம். கற்றது ஓரிடம் நிற்பது ஓரிடம். 

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...