Thursday, August 26, 2010

இனியேனும் என்னை மறந்துவிடு

ஒரு முறையேனும்
பார்த்து விடு ;
ஏங்கி கிடக்குது
என விழிகள்

மறுமுறை
பார்த்தால் பேசிவிடு ;
மயக்கத்தில் கிடக்குது
என மனநிலை

உன் மந்தகாச
புன்னகையை மாற்றிவிடு ;
சுவாசம் மறக்குது
என உயிர்நிலை

உன் செல்பேசியை
சற்றே (எனபக்கம்) சிணுங்கவிடு ;
துடிக்க மறுக்குது
என இதயம்

உன் உதடுகளின் இடைவெளியில்
உரசிச் செல்லும் போதெல்லாம்
உயிர்வலி மறக்கிறேன்

உன் வாடை காற்றில்
வழி மறந்து
சுயம் இழந்து சுற்றி திரிகிறேன்
இனியேனும் என்னை
மறந்துவிடு

Thursday, August 12, 2010

Innum peru vaikala

உன் பிரிவிலே தான்
என கவிதைகள்
கருவாகின்றன

உன் உருவிலே தான்
என நினைவுகள்
நிஜமாகின்றன

சில நாட்கள்
என மனதில் மட்டுமே இரு
நான் கவிதைகளையும்
காதலிக்க வேண்டும்

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...