Thursday, August 26, 2010

இனியேனும் என்னை மறந்துவிடு

ஒரு முறையேனும்
பார்த்து விடு ;
ஏங்கி கிடக்குது
என விழிகள்

மறுமுறை
பார்த்தால் பேசிவிடு ;
மயக்கத்தில் கிடக்குது
என மனநிலை

உன் மந்தகாச
புன்னகையை மாற்றிவிடு ;
சுவாசம் மறக்குது
என உயிர்நிலை

உன் செல்பேசியை
சற்றே (எனபக்கம்) சிணுங்கவிடு ;
துடிக்க மறுக்குது
என இதயம்

உன் உதடுகளின் இடைவெளியில்
உரசிச் செல்லும் போதெல்லாம்
உயிர்வலி மறக்கிறேன்

உன் வாடை காற்றில்
வழி மறந்து
சுயம் இழந்து சுற்றி திரிகிறேன்
இனியேனும் என்னை
மறந்துவிடு

1 comment:

  1. confirm agiduchi.. idhu adhe than.. adhan adhanya.. but ava ennamo ungala marandhuta.. neenga than adhu theriyamale irukinga...

    ReplyDelete

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...